நான் 2009ஆம் ஆண்டு இறுதியில் தேனீ மாவட்டம் "மேகமலை" க்கு செல்ல முடிவு செய்தேன். நான் கடந்த 2 ஆண்ட க எங்கும் செல்லவில்லை, எனது பயணம் மிக சிறந்த ஒன்றாக இருக்க இணையத்தளம் வழியாக தேடி நான் முடிவு செய்தேன். எந்த ஒருபயணமும் மிக இனிதாக இருக்க நண்பர்களை கொண்டு இருக்கவேண்டும். என் நண்பர்கள் அனைவரும் அவர்களது அன்றாட பணியில் முமுரமாக இருந்ததனால், திரு. சக்திவேல் அவர்கள் இந்த இனிய பயணத்தை மேலும் சிறப்பு செய என்னுடன் இணைந்தார். நாங்கள் இருவரும் திண்டுகல் பேருந்து நிலையத்தில் சந்தித்து இணைந்து பயணத்தை தொடர முடிவு செய்தோம். எங்களது பயணம் கிருஸ்துமஸ் விடுமுறை இணைத்து திட்டமிட்டு 3 ( 25,26 & 27th Dec 2009) நாட்களக தொடர முடிவு செய்தோம்.
நான் 24 - 12 - 2009 இரவு 9:30 மணிக்கு எனது வீட்டில் இருந்தது புறபட்டேன். கடலூரில் இருந்து 11:20 மணிக்கு பழனி செல்லும் பேருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் என்று நான் அறிவேன். திரு. சக்திவேல் அவர்கள் 10:00 மணிக்கு அவர்களின் இல்லத்தில் இருந்த்து புறபட்டார். 10:05 மணிக்கு நான் கடலூர் சென்றுஅடைந்தென். இரண்டு பயணிகள் அமரும் இருக்கையை நான் தேர்வு செய்து இருக்கை 15ல் மத்தியில் அமர்ந்தேன். தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை காரணமாக பேருந்து குறித்த நேரத்துக்கு முன்பாக தனது முழு பயணிகள் கொள்ளளவை எட்டியது. நான் திரு. சக்திவேல் அவைகளை தொடர்பு கொண்டு அளவல்லவினோம். 11:20pm பேருந்து மிக மெதுவாக தனது பயணத்தை தொடங்கியது. இந்த பேருந்தின் வழி தடம் கடலூர் – நெய்வேலி – விருதாசலம் – அரியலூர் – திருச்சி – திண்டுக்கல் – பழனி. ஆனால் புதுவையில் இருந்து செல்ல சிறந்த வழி விழுப்புரம் – திருச்சி – திண்டுக்கல் – பழனி, புதிய நான்கு வழி சாலை பயணத்தை சுகமாக்கும்.
25-12-2009: எப்பொதும் போல பேருந்து ஓட்டுனர் 20 நிமிடங்கள் இரவு உணவுவிடுதியில் இளைபாறினார். சுற்றுப்புற சுழ்நிலை மிகவும் அசுத்தமாக, பழைய சினிமா பாடல் மிக சத்தமாக தூங்குகின்ற பயணிகளை எழுப்பியது. பணம் மட்டும் ஒன்றை நோக்கம்கொண்டதாகவும், பயணிகள் நலனை மறந்தும் உணவுவிடுதிகல் எல்லா இடங்களிலும் செயல்பட்டுகொண்டு இருக்கிறது. நான் பேருந்து சத்தத்தின் இடையே சின்ன சின்ன உறக்கம் கொண்டு சில பல கனவுகள் பயணத்தை மிக எளிமையாக இருக்க செய்தது. பேருந்தின் நடுத்துனரின் மிக சத்தமான ஒலி என் உறக்கத்தை களைய செய்தது. 3:30am – திருச்சி மத்திய பேருந்து நிலையம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை காரணமாக மிகவும் அதிக அளவு பயணிகளை சுமந்துகொண்டு பேருந்துகளை நோக்கிகொண்டு இருந்தது. நான் எனது நண்பரின் அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்று தோல்வி அடைத்தேன், குறுதகவல் ஒன்றை செலுத்தி நான் திண்டுக்கல் வரும் நேரத்தை 5:30am என்று அனுப்பினேன். நான் பயணம் கொண்ட பழநி பேருந்து 5:15am திண்டுக்கல் பேருந்து நிலையம் அடைந்தது. நான் தொலைதூர பயணம் செல்லும்போது பயணஇறுதில் பேருந்து ஓட்டுனர் அவைகளுக்கு புன்னகையுடன் நன்றி கூறுவேன். சில வருடங்கள்முன்பு எனது இனிய நண்பர் பல் மருத்துவர் பாலசுப்ரமணியன் அவர்களின் மூலமாக இந்த நற்பண்பை கற்றுக்கொண்டேன். நான் நன்றி கூறி இரங்கும் போது எனது அலைபேசியில் அலறியது, நண்பர் திரு. சக்திவேல்.
திண்டுக்கல் பேருந்து நிலைய கடைகள் மிக அதிக ஒளி/ஒளி உள்ள மின்சதனங்களை பயன்படுத்தி அதிகாலையில் சுறுசுறுபாக இயங்கிகொண்டுஇருந்தது. திரு. சக்திவேல் அவர்கள் ஆவின்பால் கடையில் இருந்து அழைப்பு விடுத்தார். மிக எளிதக நான் ஆவின்பால் கடையை கண்டுகொண்டேன், திரு. சக்திவேல் அவைகளின் நலம் மற்றும் அவர் குடும்ப நலன் அறிந்துகொண்டேன், அவர் 4:30 மணியில் இருந்து எதிர்பார்த்து இருந்ததாக கூறினார். நீண்டகால பயண களைப்பை நீக்க சற்று இளைபறினேன். திரு. சக்திவேல் மிக இனிமையான குணம் உள்ள நண்பர், 5 வருடங்களுக்கு பிறகு நான் சந்தித்தேன். இந்த பயணத்தின் முன்பாக நான் இணையதளம் வழியாக நாங்கள் செல்ல வேண்டிய இடங்களை வரைபடம் மூலமாகவும் குறித்துவைத்து இருந்த்து பயனுள்ளதாக்கியது. நாங்கள் செல்லும் அந்த பேருந்து மதுரையில் இருந்து வந்தது, குமுளி செல்லும் அந்த பேருந்து கிழ் கண்ட தடம் வழியாக செல்லும் திண்டுக்கல் – தேனி – கம்பம் – கூடலூர் – குமுளி.
எங்கள் பயண திட்டம்
மேகமலை - சுர்ளி நீர்விழிச்சி - தேக்கடி
எங்கள் முழு பயண பாதை
இல்லம் - திண்டுக்கல் – தேனி – சின்னமனூர் – மேகமலை – சின்னமனூர் – கம்பம் – சுர்ளி நீர்விழிச்சி – கம்பம் – தேக்கடி – கம்பம் – திண்டுக்கல் - இல்லம்
அதிக பேருந்துகள் திண்டுக்கல் – தேனி – கம்பம் – குமுளி வழி தடத்தில் உள்ளது. நாங்கள் 7:45am சின்னமனூர் பேருந்து நிறுத்தம் வந்து அடைத்தோம், அங்குள்ள தானி ஓட்டுனர் மேகமலை செல்ல 8:30am பேருந்து உள்ளதக கூறினர். சின்னமனூர் பேருந்து நிறுத்ததில் இருந்து சின்னமனூர் பேருந்து நிலையம் 10min நடை பயணத்திற்குபின் அங்கு சென்று திண்டுக்கல் போக்குவரத்து கழகத்தின் முன் பதிவு மையத்தில் Rs.10/- க்கு 2 இருக்கை முன்பதிவு செய்தோம். ( Rs.3/- per ticket but counter man is collecting unofficially Rs.5/- head ) பேருந்து 8:30 மணிக்கு வரும் என்று கூறினார்கள். நாங்கள் காலை உணவு அங்குள்ள உணவுவிடுதியில் முடிதோம். இருக்கை முன்பதிவு முழுவதும் விற்றுவிட்டது, ஆனால் பேருந்து வரும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. மலைபதை மிகமோசமாக உள்ளதால் அடிக்கடி பேருந்து பழது ஏற்படும் என்று அறிந்த்தோம். எங்களது பொறுமையை சோதித்தது, ஒருவழியாக பேருந்து 10:45க்கு வந்ததும் அதன் ஓட்டுனர் ஆக்சில் பழது தெரிவித்தார், மேலும் இந்த பேருந்து செல்லாது என தெரிவித்தனர். அடுத்த பேருந்து மணி 12.30கு என்றும், அந்த வண்டியும் பஞ்சர் ஆகி வந்துகொண்டு இருபதக கூறினார். அங்குள்ளவர்கள் பல பல திகில் அனுபவங்கள் குறி எங்கள் ஆர்வதை மேலும் மேலும் அதிகபடுத்தினர். எங்களுது முதல் முயற்சி தோல்வியில் முடித்தது, நேரம் இல்லாததால் காரணத்திலும் நாங்கள் கம்பம் சென்று சுர்ளி தீர்த்தம் செல்ல முடிவுசெய்தோம். 11:30ku கம்பம் செல்ல பேருந்து ஏறினோம், 12:00கு கம்பம் சென்று நல்ல லட்ஜில் Rs. 250/day அறை எடுத்து ஒருமணி நேரம் ஓய்வு எடுத்தோம்.
பயணம் செல்லும் போது எதிர்பர நிலையில் பயணம் தடை ஏற்படும் போது நாம் அடுத்த இலக்கை நோக்கி செல்ல தேவையான அறிவை பெற்றிருக்க வேண்டும், இதனால் நம் நேரம் செமிக்கபடும்.
சுர்ளி தீர்த்தம்

13:00கு மதிய உணவு அருந்தி, சுர்ளி தீர்த்தம் செல்ல காந்தி சிலை அருகே சிறிய பேருந்து Rs.5/- செலுத்தி 20 நிமிடங்கள் பயணித்து சுர்ளி அருவி வந்துஅடைத்தோம். 6km கம்பதில் இருந்து. செல்லும் வழியில் திரட்சி தோட்டம், பசுமையான மரங்கள் செடி கொடிகள், நீர் நிலைகள் என கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. திரும்பி செல்லும் போது நடந்துசெல்ல முடிவு செய்தோம். சுர்ளி தீர்த்தம் – சுர்ளி அருவிகும் 500mts. தூரம். நாங்கள் நடந்து சென்றோம். சுர்ளி அருவியில் நீர் நன்றாக வந்துகொண்டு இருந்தது. இரண்டு மணி நேரம் நான் ஆனந்த குளியல் எடுத்தேன், எனைதொடர்ந்து எனது நண்பர் திரு. சக்திவேல். ஆனந்தத்தின் ஒருபடி மேல் சென்று ஆனந்தத்தை அனுபவித்தோம். 5:00ku நாங்கள் திரும்ப மனம் இல்ல நடந்து திரட்சி தோட்டம் அழகை கண்டு உள்ளம் கண்கள் பரவசபட்டன. மேலும் நாங்கள்சென்ற திரட்சி தோட்டம் இயற்கை உரம் கொண்டு விவசயம் மேற்கொண்டதை அறிந்தோம் . கம்பம் – 17:35ku சென்று அடைந்தோம்.
தேக்கடி
26-Jan-2009: காலை 7:15 மணிக்கு நாங்கள் இருவரும் கம்பம் to குமுளி செல்லும் பேருந்தில் புறப்பட்டு பயணம் செய்தோம், எங்களின் அடுத்த இலக்கு தேக்கடி சுற்றுலாதளம். குமுளியும் - தேக்கடியும் மிக அரு அருகில் உள்ள தமிழ்நாடு - கேரளா மாநிலங்கலை வேறுபடுத்தும் இடங்கள். தேக்கடி பெரியார் வனசரகதின் எல்லைக்கு உட்பட்ட இடமாகும். வாழை சிப்ஸ் கடைகள், உணவுகூடங்கள், கலைகூடங்கள் என சுற்றுலாதளற்கு மேலும் அழகு சேர்க்கும் இடமாக சாலைகள் உள்ளது. நாங்கள் பேருந்து நிலையத்தில் உள்ள சுற்றுலா உதவி நிலையத்தை நாடினோம் , ஆனால் 10௦ மணிக்கு திறக்கபடும் என்று அறிந்தோம், அருகில் உள்ள H1N1 நோய் தடுப்பு நிலையத்தில் உள்ள மருத்துவர் எங்களுகு வழி காட்டினர். Rs.50/- கொடுத்து தேக்கடி படகு நிலையம் அடைத்தோம். தேக்கடி சுற்றுலாதளம், பெரியார் வணசரகதுக்கு உட்பட இடம், கேரளா அரசு Rs.25/- head நுழைவாயில் கட்டணம் வசூல் செய்யபடுகிறது. நாங்கள் செல்லும் சில நாட்களுக்கு முன்னர் நடத்த விபத்தில் சுமார் 50 பயணிகள் இறந்து விட்டனர், எனவே பாதுகாப்பை கரணம் கொண்டு படகு சவாரி தடை செய்யபட்டது. இங்கு வரும் முன்பே எங்களுக்கு படகு சவாரி தடை செய்துள்ளது தெரியும். நாங்கள் சில மணித்துளிகள் செலவுட்டு, அங்கு உள்ள உதவியாளர் அலுவலகத்தில் அங்குள்ள அடுத்த சுற்றுல்ல நிலைகளை கேட்டுஅறிந்தோம். 10 மணிக்கு நுழைவாயில் Trekking ( மலைகளுக்கு மற்றும் காடுகளுக்கு இடைய நடந்து செல்லும் ) 3 மணி நேரம் செல்லும் பயண திட்டம் உள்ளது. Rs.500/- head - நாங்கள் செல்ல அனுமதி கெடுக்கவில்லை, மிக சரியான காலணிகள் (shoe) மற்றும் நன்கு நடக்க கூடிய சக்திஉள்ளவர்கள் மட்டும் தேர்வு செய்யபடுகின்ற்னர். அங்கு உள்ள ஆட்டோ ஓட்டுனர் எங்களுக்கு யானை சவாரி சுற்றுலாதளம் உள்ளதாக கூறினர். நாங்கள் அங்கு சென்று Rs.300/- ஒருவருக்கு செலுத்தி இருவரும் சாந்தகுமாரி என்னும் யானை-ல் 30 நிமிடங்கள் சவாரி செய்தோம், பெண் யானை, வயது 35 ,
பெரியார் சரகம் நுழைவாயில் அருகில் உள்ள Museum எங்களை கவர்ந்த இடங்களில் ஒன்று. பெரியார் வனசரகத்தின் எல்லைக்கு உட்பட்ட காடுகளில் உள்ள அணைத்துவிதமான தகவல்கலை உலகுக்கு தெரிவுக்கும் இடம். இறந்து போன பாம்பு, பலவிதமான உயிர்களின் அணிவகுப்பு, அனைவரும் பார்க்க, காடுகளின் அவசியத்தின் உண்மையை அறிய மறக்காமல் பார்க்க வேண்டிய இடம். நுலகம் அருகில் உள்ளது, முலிகை மரங்கள் மற்றும் பெரியார் வனசரகதின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் அருமை பெருமையை உலகு எடுத்து சொல்லும் இடமாக உள்ளது. 5 மணி நேரம் நடை பயணம் செய்தோம், போகும் வழியில் காட்டு மான்கள் காண நேரிடது. நாங்கள் மிகவும் அனுபவித்து ஒவ் ஒரு அடியாக நடந்தோம். நடந்தே சென்று நடந்தே திரும்பினோம். 17:00hrs நாங்க பேருந்து நிலையத்தை அடைத்தோம்,
குமுளி to கம்பம் சென்றோம். திரு. சக்திவேல் அவர்கள் அவருடய மிக முக்கிய சொந்த காரணத்தினால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு தர்மபுரி சென்றார். கம்பம் பேருந்து நிலையம் சென்று வழியனுப்பி வைத்தேன். மறுநாள் பயணத்தின் கடைசி நாள், மேகமலைக்கு தனியே போகும் சுழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். திரு. சக்திவேல் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு ஹோட்டல் சென்றேன்.
மேகமலை
27th Dec 2009 - 5:45am மணிக்கு ஹோட்டலில் இருந்து பேருந்து நிலையம் சென்றேன், காலை வேலை, கடும் குளிர் ஆனால் நான் விரும்பினேன். எனது கைசுமையை clock roomil வைதுவிட்டு சின்னமனூர் நோக்கி நான் பயணமானேன். பயணத்தின் முதல் நாளில் ஏற்பட்ட சோதனைகளை கடந்து இன்று கண்டிப்பாக செல்லவேண்டும் என்று விரும்பினேன். 7:30 மணி இருந்து நான் காத்து கொண்டுருதேன், 8:45 மணிக்கு முன்பதிவு திறந்தனர், 8:00 மணிக்கு திறந்து இருக்க வேண்டும். மேல்கூரியது போல் நான் முன் பதிவு செய்தேன். பேருந்தின் ஓட்டுனருக்கு பின் 3 இருக்கை பின்னால் எனது இருக்கை எண் 8. மிக நீண்ட நேரம் காத்து கொண்டுருதேன், அந்த இனிய நேரத்தில் எனக்கு ஒரு நண்பர் திரு.முத்துகுமரன் அறிமுகம் அனர். அவர் வணிக வேலையாக மேகமலைக்கு முருகன் என்பவரின் கடைக்கு செல்வதக கூறினார். நாங்கள் 
இருவரும் அளவலவினோம். பேருந்து 9:45am வந்தது. ஓட்டுனர் நடத்துனர் இருவரும் தனது பொறுப்புகளை எடுத்துகொன்டனர், பேருந்தின் நிலையை சரி பார்துகொண்டனர். மலை பாதை-ல் பயணிக்கும் பேருந்துதில் ஒரு வழி தான் இருக்கும். 10:15 மணிக்கு பேருந்து தனது பயனத்தயை மேற்கொண்டது, பேருந்து மேகமலை கடந்து மணாளர், வன்னியார், இரவங்களறு செல்லும். பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பயணிகளிடம் மிகவும் நட்புடன் அளவல்வினர், இருவரும் மலை கிராமத்து மக்களின் மதிக்ககூடிய தூதுவர்களாக செயல்பட்டுகொண்டுள்ளனர். எல்லா பொருடகள்யும் இவர்களது உதவியால் தன் மலைக்கு எடுத்து செல்கின்றனர். 20 நிமிட பயணத்துக்கு பின் மலை சாலை தொடங்க கூடிய இடத்திற்கு அடைந்தோம், காவல்துறை கண்காணிப்பு, செல்லும் வண்டிகளையும், நபர்களையும் நோட்டம்இட்டது. மலைபாதை முழுவதும் சாலைகள் எந்த அளவுக்கு சேதம் அடையவேண்டுமோ அந்தஅளவுக்கு சேதத்துடன், தடுப்பு சுவர் இல்லாமல், மெகா பள்ளங்கல் இருந்த பாதையும், 18 ஆபத்து கொண்டை உசி வலைவுகள் எங்கள் பேருந்தை வழி நடத்தியது. ஓட்டுனர்-ன் அனுபவம் பாதுகாப்பான பயணத்தை அடைய வழி வகுக்கும். கிழ் வரும் வாகனத்துக்கு முதலில் வழி மேல் செல்லும் வாகனம் செல்ல வேண்டும் என்பது மிக மிக முக்கிய விதி. சாலைகள் பல வருடங்களுக்கு முன் மேல் இருக்கும் தோட்ட நிறுவத்தினர் அமைத்தது. மேகமலை 800 மீட்டர் ~ 1500 மீட்டர் கடல் மட்டதில் இருந்து மேல் அமைந்து உள்ளது. மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலபரப் புடன், மிக அழகாண சாய்ந்த நில பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டம், உயர்ந்த மலைகலீன் அழகு, மிக ஆழமான பள்ளம் என கண்களை கொள்ளை கொள்ளும் இடங்கள் பல பல. அழகான இந்த சுழ்நிலை எங்கள் உள்ளதையும் மனதையும் இன்புற வைத்தது, மேலும் எங்கள் ஆவலை துண்டியது. மதியம் 12 : 30 மணிக்கு நாங்கள் Highwayves என்னும் நிறுத்தத்தில் இறங்கினோம். இதுதான் மிக சிறந்த இயற்கை கட்சிகலை பார்க்கும் இடமாக எங்கள்உடன் பயணம் மேற்கொண்ட பயணி தெரிவித்தார். நாங்கள் பேருந்தை விட்டு இரங்கியபோது எங்களை முற்றிலும் மறைக்ககூடிய பனி மேகம் எங்களை வரவேற்றுது. எங்களின் பார்வை துரம் 1 மீட்டர்கும் குறைவக இருந்தது. நண்பர் முத்துகுமார் அவர்கள் திரு. முருகன் அவர்களை பணி நிமித்தமக நன்கு அறிவர். திரு. முருகன் அவர்கள் அங்கு சிறு வணிகம் நடத்தி வருகிறார். திரு முருகன் மற்றும் அவர் குடுபத்தினர் எங்களை அன்புடன் உபசரித்தனர். நண்பர் திரு. முருகன் அவர்கள் தனது இரு புதல்வர்களையும் அழைத்து எங்கள் இருவர்க்கும் அங்கு உள்ள இயற்கை கட்சிகளை சுற்றி கண்பிக்க கூறினார்.
மிகவும் அடர்த்தியான பனி மேகங்கள் எங்களை சுற்றி காணப்பட்டது, இத்தனிகும் என் கை கடிகாரம் மணி மதியம் 1 30 மணி என கட்டியது. ஒரு அழகான ஏரி அங்கு வந்த சுற்றுலா பயணிகளையும் மற்றும் இயற்கை விரும்பிகளையும் வெகுவாக கவர்ந்தது. திரு. முருகன் அவர்களின் இரண்டு குழந்தைகள் எங்களை அந்த ஏரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறிய அருவி (Proxy Falls ) உள்ளது நாங்கள் 30 நிமிடங்கள் அங்கு குளித்தோம். அந்த நேரம் தண்ணீரின் வீழ்ச்சி குறைவாக இருந்தது, தண்ணீர் 18 டிக்ரீ குளிர் அளவுக இருந்தது. தண்ணீரின் குளிர்ச்சியை விரும்பினோம். நாங்கள் குளித்த நேரத்தில் ஒரு துளி நீர் வாயில் பட்டது அது சுவைபதற்கு இனிமையாக இருந்தது, மன்னிக்கவும் இது உண்மையான இயற்கை தண்ணீர். நான் இந்த இயற்கை தண்ணீரை எனக்கு போதுமான அளவு குடித்தேன்.
Bus Timings:
For UP Hill
3:30am-From Theni 4:00am-From Chinnamannor
4:30am-From Theni 5:00am-From Chinnamannor
9:30am-From Chinnamannor
For Down Hill 3:00, 8:00, 9:00, 15:00,17:00, 18:00hrs
Bus timings are subject to change, due to very bad Road condition.
For Room Booking at Government Cottage:
Mr.R Murugan
04554-232389
நீர்வீழ்ச்சி ஆகஸ்ட் மற்றும் ஜனவரி மாதத்தில்நீர் வீழ்ச்சி நன்றாக இருக்கும். வன்னியர் மற்றும் இரவங்களறு பக்கத்தில் நாம் வன விலங்குகளின் தடயங்களை காணலாம். பிறகு திரு.முருகன் வணிக நிறுவனத்திற்கு சென்றோம் இது ஹ்வேஸ் டவுன் பஞ்சாயத் பக்கத்தில் இருக்கிறது. இங்கு தங்கும் விடுதி உள்ளது பஞ்சாயத்திற்கு சொந்தமணுது, ஒரு நாள் தங்குவதற்கு ருபாய் 500. யார் அங்கு தங்குவதற்கு விருமிபினாலும் திரு.முருகனை அவர்களை தொடர்பு கொள்ளலாம். விடுதியை சுற்றி பசுமையான தோட்டம், முன்னால் எரி என இயற்கை உங்கள் சுண்டும். நல்ல உணவுகளை திரு.முருகன் வணிக நிறுவனத்திடம் இருந்து பெற்றோம். அவரது குடும்பத்திற்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Bus Timings:
For UP Hill
3:30am-From Theni 4:00am-From Chinnamannor
4:30am-From Theni 5:00am-From Chinnamannor
9:30am-From Chinnamannor
For Down Hill 3:00, 8:00, 9:00, 15:00,17:00, 18:00hrs
Bus timings are subject to change, due to very bad Road condition.
For Room Booking at Government Cottage:
Mr.R Murugan
04554-232389
நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றோம் ஒரு இயற்கை உலகத்தை காண்பதற்கு. நிமிடத்திற்கு நிமிடம் அங்கு இருந்த சூழ்நிலை மாறி கொண்டே இருந்தது. இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. இது எங்கும் காண முடியாத சுற்றுலாதலம். அங்கு BSNL cell phone tower உள்ளது, இங்கு உள்ள மின் உற்பதிநிலையம் முலமாக மின்சாரம் அங்கு வினியோகிக்கபடுகிறது . காற்று, நீர், நிலம் என தூய்மையக நடந்து செல்லும் பதை, எங்கும் சில சில நீர் சுனைகள், சாலையை கடந்து கொண்டு இருந்ததது.
மணி 3 .50 நாங்கள் வந்த பேருந்து திரும்பி கிழ் செல்ல வந்துகொண்டுறின்தது. பேருந்தில் ஏறினோம் அனால் நாங்கள் உட்கார இடம் இல்லை, மேலும் நேரம் செல்ல செல்ல பேருந்து தனது முழு கொள்ளளவை எட்டும் என்றும் எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் நடதுனர் உதவி கோரி மேல்செல்ல அனுமதி வாங்கினோம். பேரூந்தின் மேல் நான், எனது நண்பன் திரு.முத்துகுமரன் அவர்களும் டயர் மேல் அமர்ந்து பயணம் செய்தோம், balance செய்யமுடியவில்லை , டயர்ன்-யுரம் அதிகம் இருந்ததினால், கற்று பலமா வீசியது, நான் எனது பயணத்தின் மிக முக்கியமான திரில் மற்றும் சகச பயணத்தின் அனுபவத்யை அனுபவித்துக்கொண்டு எதிர் வரும் ஆபதுகளைந்த
மேற்கொண்டோம். நேரம் செல்ல செல்ல நாங்கள் மிகவும் comfort அக இல்லை எனவே நாங்கள் டயரில்றிந்து இரங்கி பேரூந்தின் மேல்கூரையில் அமரந்து பயணம் செய்தோம். எங்கு நோக்குகினும் பசுமயான இயற்கை கொஞ்சும் கட்சிகள், நீர்நீலைகள் புதுவிதமான அனுபவம். எங்கள் 20 நிமிட பயணத்திற்கு பின் நாங்கள் சில எதிர்பார்த்த ஆபத்துகளை எதிர் கொண்டோம், மரகிலைகள் எங்களை தாக்கியது, லாவகமாக நங்கள் எங்கள் உடலயை, தலையை சாய்த்து பாதுகத்துகொண்டோம். பேருந்தின் மீது பயணம் எவ்வளுவு ஆபத்து நிறந்த பயணம் என்று அன்று எங்களுக்கு நன்கு புரிந்தது. 4 :30 மணிக்கு எங்களை அடர்த்தியான பனிமூட்டம் சுற்றி மறைத்து, சாலையும் எங்களால் பார்க்க முடியவில்லை. மேகமூடத்தின் மேல் நங்கள் பயணம் செய்தோம். சாலைகள் மோசமாக, எதிர்வரும் வாகனம் தெரியாத நிலையில் எங்கள் ஓட்டுனர் அவரது அனுபவத்தை அவரது தொழிலில் காட்டினர். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக ஆபத்து அதிகம் உள்ள பயணமாக நான் ஒவ்ஒரு நொடியும் அணுபவிது பயணம் செய்தேன். மலை 5:30 மணி அளவில் மழை வர நாங்கள் குரல் எழுப்பி பேருந்தை நிறுத்தி மேல் இரங்கி பேருந்தினுள் பயணித்தோம். சின்னமனூர் காந்தி சிலையை 18:10 பேருந்து வந்தது. ஓட்டுனர்ருக்கு எங்கள் மனார்த்த நன்றியை, புதுவருட வாழ்த்துகளை தெரியபடுத்தி நாங்கள் விடைபெற்றோம்.



திரு. முத்துகுமரன் அவர்களுடன் நான் தேனீர் அருந்தி நாங்கள் அவரவர் இல்லம் நோக்கி பயணம் ஆனோம். சில மணி நேரம் நாங்கள் ஒன்றாக இருந்தலும் பல நாட்கள் பழகியது போன்ற உணர்வு எங்களிடம் ஏற்பட்டது. ஒவோற் பயணமும் சில நண்பர்களை புதிதாக கொடுக்கும் என்ற உண்மை நிசம். நாங்கள் பரஸ்பரம் நன்றி மற்றும் புதுவருட வாழ்த்துகளை தெரியபடுத்தி நாங்கள் விடைபெற்றோம். திரு. முத்துகுமரன் அவர்கள் மதுரை நோக்கி பயணம்மனர்.
நான் கம்பம் சென்று எனது கைபையை clock roomil இரூந்து எடுத்துக்கொண்டு சென்னை செல்லும் பேருந்து-ல் இருக்கை இல்லாமல், கம்பம் - தேனீ - திண்டுக்கல் - திருச்சி - கடலூர் - புதுச்சேரி என எனது பயணத்தை தொடருந்து 28-12-2009 அன்று காலை மணி 7:10 கு இல்லம் வந்து அடைத்தேன். என் இந்த பயணம் என்றும் எனது உள்ளத்தில் பசுமையாக இருக்கும். நான் இந்த நேரத்தில் நேராகவும் மற்றும் மறைமுகமாக உதவி செய்த எல்லா நல்உள்ளங்க ளுகும் நன்றி செலுத்த விரும்புகேறேன்.
நன்றி
ப . கருணாகரன்
புதுவை
pkgaran@gmail.com